ADDED : மார் 21, 2026 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்:பீஹார் மாநிலம், மிசாபூரை சேர்ந்த பப்பு சஹானி மகன் ராஜூ சஹானி, 33. பல்லடம் அடுத்த, சுக்கம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருவதாக கூறி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவ்வப்போது பீஹார் மாநிலம் சென்று, அங்கிருந்து கஞ்சா வாங்கி வந்து, பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ரகசிய தகவல் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், இவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது, தாராபுரம் மற்றும் பல்லடம் போலீஸ் ஸ்டேஷன்களில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராஜூ சஹானியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

