/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
/
இன்று காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
ADDED : மார் 20, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,: சமையல் காஸ் நுகர்வோர்களுக்கான குறை தீர் கூட்டம், இன்று மாலை, 4:00 மணிக்கு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம் (அறை எண் 120)ல், நடக்கிறது.
மாவட்டத்திலுள்ள அனைத்து காஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள சமையல் காஸ் நுகர்வோர் புகார்கள், குறைபாடு இருந்தால், எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்று பயன்பெறுமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.