sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

/

 பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

 பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

 பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்


ADDED : நவ 19, 2025 03:50 AM

Google News

ADDED : நவ 19, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மடத்துக்குளத்தில், மாவட்ட சட்ட பணிகள் குழு சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தமிழக அரசு சார்பில், பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சந்தோஷ் தலைமை வகித்தார்.

இம்முகாமில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது, குழந்தைத் திருமணம் எவ்வாறு சமூக வளர்ச்சிக்கு எதிராக உள்ளது என்பது குறித்தும், பெண் கல்வியின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

மேலும், பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்பங்களை தடுத்தல், குழந்தைகளின் உரிமைகள், 6 முதல், 14 வயதுடைய குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை என வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட சமூக நலத்துறை மைய நிர்வாகி ராஜேஸ்வரி, மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு வக்கீல் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us