/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமி கூட்டு பலாத்காரம்: 3 சிறார்கள் உள்பட 9 பேர் கைது
/
சிறுமி கூட்டு பலாத்காரம்: 3 சிறார்கள் உள்பட 9 பேர் கைது
சிறுமி கூட்டு பலாத்காரம்: 3 சிறார்கள் உள்பட 9 பேர் கைது
சிறுமி கூட்டு பலாத்காரம்: 3 சிறார்கள் உள்பட 9 பேர் கைது
ADDED : மே 13, 2024 03:41 PM

உடுமலை: 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது தாத்தா - பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியை உறவினர்கள் விசாரித்த போது, 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், ஜெய காளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணி குமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும் 14, 15 மற்றும் 16 வயது சிறுவர்கள் என மொத்தம் ஒன்பது பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.