sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொடுத்தா ராம்... ஏ.டி.எம்.,மில் கண்டெடுத்த பணம்

/

கொடுத்தா ராம்... ஏ.டி.எம்.,மில் கண்டெடுத்த பணம்

கொடுத்தா ராம்... ஏ.டி.எம்.,மில் கண்டெடுத்த பணம்

கொடுத்தா ராம்... ஏ.டி.எம்.,மில் கண்டெடுத்த பணம்


ADDED : ஜன 22, 2024 12:44 AM

Google News

ADDED : ஜன 22, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;தாராபுரத்தில் ஏ.டி.எம்., மையத்தில் கண்டெடுத்த, 20 ஆயிரம் ரூபாயை, போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், குண்டடத்தை சேர்ந்தவர் தனபால், 45, நடத்துனர். இவர் நேற்று மதியம் தாராபுரம், பொள்ளாச்சி ரோடு ரவுண்டானா அருகே உள்ள எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது, மெஷின் மேலே கேட்பாரற்று கிடந்த, 20 ஆயிரம் ரூபாயை எடுத்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

தாராபுரம் போலீசார், சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் கொடுத்து, 'சிசிடிவி' கேமராவை பார்வையிட்டனர். அதில், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் முத்துசாமி, 66 என்பவர் பணத்தை தவற விட்டு சென்றது தெரிந்தது.

அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவரிடம் பணத்தை போலீசார் ஒப்படைத்தனர். பணத்தை கண்டெடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த தனபாலின் நேர்மையை போலீசார் மற்றும் பலர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us