sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு கலைக்கல்லுாரி கலந்தாய்வு இன்று துவக்கம்

/

அரசு கலைக்கல்லுாரி கலந்தாய்வு இன்று துவக்கம்

அரசு கலைக்கல்லுாரி கலந்தாய்வு இன்று துவக்கம்

அரசு கலைக்கல்லுாரி கலந்தாய்வு இன்று துவக்கம்


ADDED : ஜூன் 01, 2025 11:15 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடக்கிறது.

உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் துவங்குகிறது.

இன்று காலை, 9:00 மணிக்கு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

இக்கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், சி சான்றிதழ் பெற்ற தேசியமாணவர் படை உறுப்பினர்கள், அந்தமான் நிகோபர் பகுதி தமிழ் வம்சாவழியினர், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் , பாதுகாப்புப்படை வீரர்களின் குழந்தைகள், மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப்பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள் பங்கேற்கலாம்.

அடுத்து, வரும் 4ம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. அன்று --தரவரிசை 1 முதல் 1000 வரை காலையிலும், 1001 முதல் 2000 வரை மதியமும் கலந்தாய்வு நடக்கிறது.

வரும் 5ம் தேதி தரவரிசை 2001 முதல் 3000 வரை காலையிலும், 3001 முதல் 4000 வரை மதியமும் நடக்கிறது. ஜூன் 6ம்தேதி தரவரிசை 4001 முதல் 5500 வரை காலையில், 5501முதல் 6974 வரை மதியமும் நடக்கிறது.

இறுதியாக ஜூன் 9ம் தேதி காலையில் தரவரிசைப்பட்டியல் 1 முதல் 6974 வரை தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியப்பாடப் பிரிவுக்கும் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடக்கிறது.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அதன் 3 நகல்கள், அசல் மாற்றுச்சான்றிதழ் அதன் 3 நகல்கள், ஆதார் அட்டை அசல் மற்றும் மூன்று நகல், ஜாதிச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான 5 புகைப்படங்கள், கல்லுாரி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், விண்ணப்ப நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் கொண்டு வருதல் மற்றும் மாணவரின் பெற்றோரை உடன் அழைத்து வர வேண்டும்.

இவ்வாறு கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us