sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு கலைக்கல்லுாரி மாணவர் பேரவைத்தேர்தல்

/

அரசு கலைக்கல்லுாரி மாணவர் பேரவைத்தேர்தல்

அரசு கலைக்கல்லுாரி மாணவர் பேரவைத்தேர்தல்

அரசு கலைக்கல்லுாரி மாணவர் பேரவைத்தேர்தல்


ADDED : ஜன 02, 2025 08:10 PM

Google News

ADDED : ஜன 02, 2025 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், நடப்பு, 2024 - 25 கல்வியாண்டுக்கான மாணவர் பேரவைத்தேர்தல் நடந்தது.

இதில், இளநிலை மூன்றாமாண்டு மாணவர்களின் சார்பில், துறைச்செயலாளர் பதவிக்கான போட்டியும், இளநிலை இரண்டாமாண்டு மாணவர்களின் சார்பில், துறை இணைச்செயலாளர் பதவிக்கான போட்டியும் நடந்தது.

மாணவர்கள் அந்தந்த துறைக்கான ஓட்டுகளை பதிவு செய்து, துறைச்செயலாளர் மற்றும் இணைச்செயலாளர்களை தேர்வு செய்தனர். தொடர்ந்து துறைச்செயலாளர்கள், கல்லுாரி மாணவர் பேரவைத்தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுத்தனர்.

துறை இணை செயலாளர்கள், மாணவர் பேரவைச்செயலாளர் மற்றும் மகளிர் செயலாளரை தேர்ந்தெடுத்தனர். இதன்படி, கல்லுாரி மாணவர் பேரவைத்தலைவராக மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவர் ராஜமாணிக்கம் தேர்வு செய்யப்பட்டார்.

துணைச்செயலாளராக மூன்றாமாண்டு பி.காம்., மாணவர் கபிலேஷ், செயலாளராக இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை மாணவர் மோலிக்மேனன், மகளிர் செயலாளராக இரண்டாமாண்டு பி.பி.ஏ., மாணவி கார்த்திகா தேர்வு செய்யப்பட்டனர்.

கல்லுாரி துறைத்தலைவர்கள், தேர்தல் நடத்தும் வழிகாட்டுதல்குழு உறுப்பினர்களாக செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் கல்யாணி, துறை பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us