sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநில பயிலரங்கில் அரசு கல்லுாரி மாணவர்

/

மாநில பயிலரங்கில் அரசு கல்லுாரி மாணவர்

மாநில பயிலரங்கில் அரசு கல்லுாரி மாணவர்

மாநில பயிலரங்கில் அரசு கல்லுாரி மாணவர்


ADDED : ஆக 07, 2025 11:23 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், தமிழ்நாடு என்.எஸ்.எஸ்., சார்பில், திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலையில், இன்று துவங்கி, 3 நாட்களுக்கு 'பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுப்பதற்கான இளைஞர்கள்' என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிலரங்கம் நடத்தப்படுகிறது.

இதில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலையில் இருந்தும், 225க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு -2 சார்பில், விலங்கியல் துறை மாணவர் தீபன் சந்தோஷ் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே அரசுக்கல்லுாரி மாணவர் இவர்தான்.

தீபன் சந்தோஷை, என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தி வழியனுப்பினர்.






      Dinamalar
      Follow us