/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு
/
ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு
ADDED : ஜன 07, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: புதிய வகை ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்று உடுமலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்ற புதிய வகை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்று நெடுஞ்சாலைத்துறை உடுமலை, மடத்துக்குளம் உட்கோட்ட அலுவலர்கள், ஊழியர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினர்.

