/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில குத்துச்சண்டை போட்டி அரசுப்பள்ளி மாணவி அசத்தல்
/
மாநில குத்துச்சண்டை போட்டி அரசுப்பள்ளி மாணவி அசத்தல்
மாநில குத்துச்சண்டை போட்டி அரசுப்பள்ளி மாணவி அசத்தல்
மாநில குத்துச்சண்டை போட்டி அரசுப்பள்ளி மாணவி அசத்தல்
ADDED : ஜன 12, 2026 06:51 AM

பல்லடம்: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த பல்லடம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தேனி மாவட்டம், கம்பத்தில் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர் இதில் பங்கேற்றனர்.
பல்லடம் அடுத்த, கோடங்கிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி பூங்குழலி குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்தார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது.
சான்று மற்றும் விருதுடன் பள்ளிக்கு வந்த மாணவியை தலைமை ஆசிரியர் மரகதம் சால்வை அணிவித்து பாராட்டினார். ஆசிரியர்கள் மற்றும் மேலாண் குழுவினர் பங்கேற்றனர்.

