sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நீச்சலில் 3 தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்

/

நீச்சலில் 3 தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்

நீச்சலில் 3 தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்

நீச்சலில் 3 தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்


ADDED : அக் 24, 2024 11:52 PM

Google News

ADDED : அக் 24, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவாவில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்று, மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்று, அவிநாசியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் அசத்தியுள்ளார்.

இந்தியா பாரா ஒலிம்பிக் கமிட்டி, மத்திய மனித வள மேம்பாடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கோவா விளையாட்டு ஆணையம் ஆகியன சார்பில், கடந்த 19 முதல், 22ம் தேதி வரை கோவாவில், தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

இதில், அவிநாசி, அவிநாசிலிங்கம் பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர் சபரிஆனந்த் சப்-ஜூனியர் பிரிவில் பங்கேற்றார். 50 மற்றும் 100 மீ., ப்ரீ ஸ்டைல், 50 மீ., பேக் ஸ்டோக் ஆகிய மூன்று பிரிவுகளில் அசத்திய சபரிஆனந்த், மூன்றிலும் முதலிடம் பெற்று, தங்கம் வென்றார்.

அவிநாசிலிங்கம்பாளையம் ராஜா - சசிகலா தம்பதியின் மகனான, சபரிஆனந்த், 12. முதுகு தண்டுவட பாதிப்பில் சிரமப்பட்டு வருகிறார். இருப்பினும், தேசிய போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்று, திறமை காட்டியுள்ளார்.

கோவாவில் இருந்து திருப்பூருக்கு ரயிலில் வந்திறங்கிய மாணவர் சபரி ஆனந்த்தை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், நீச்சல் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us