/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 29ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
வரும் 29ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 22, 2024 10:45 PM
உடுமலை:திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29ம் தேதி காலை, 10:30 மணிக்கு, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அறை எண் 240ல் நடக்கிறது.
மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை அலுவலர் கொண்ட வேளாண் உதவி மையம் அமைக்கப்படுகிறது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான தகவல்கள் வழங்கப்படுவதோடு, உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகள், நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து வழங்கப்படும்.
வேளாண்சார்ந்த துறைகளால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்படும் கண்காட்சியிலும் விவசாயிகள் பங்கேற்கலாம்.