/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியால் வளர்ச்சி.. நிச்சயம்... சாத்தியம்!
/
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியால் வளர்ச்சி.. நிச்சயம்... சாத்தியம்!
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியால் வளர்ச்சி.. நிச்சயம்... சாத்தியம்!
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியால் வளர்ச்சி.. நிச்சயம்... சாத்தியம்!
ADDED : ஜூலை 16, 2025 11:17 PM

திருப்பூர்; புதிய வர்த்தக வாய்ப்புகளை குவிக்க, பருத்தி ஆடைகள் மட்டுமல்லாது, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியிலும், திருப்பூர் தொழில்துறையினர் வலுவாக கால்பதிக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி என்பது, பலகட்ட ஆராய்ச்சிகள் வாயிலாக, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் புதிய வளர்ச்சி பெற்று வருகிறது; பொதுமக்களும், புத்தாக்க செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்; ஆதரிக்கின்றனர். இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி, பெரும்பாலும் பருத்தி நுாலிழை ஆடைகளை சார்ந்தே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றத்தால், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி, 10 முதல், 15 சதவீதம் வரை வளர்ச்சி பெற்றுள்ளது.
திருப்பூரை பொறுத்தவரை, பருத்தி நுாலிழை ஆடை உற்பத்தியில் ஏறத்தாழ தன்னிறைவு அடைந்துவிட்டது; செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாறினால் மட்டுமே, அடுத்தகட்ட வளர்ச்சி என்பது சாத்தியமாகும். தற்போது, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 40 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது; அடுத்த ஆண்டில், 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். திருப்பூரின் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியால் மட்டுமே சாத்தியமாகும் என்பது, தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.