/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ ஆனந்த சாயிநாதருக்கு குரு பூர்ணிமா பூஜை
/
ஸ்ரீ ஆனந்த சாயிநாதருக்கு குரு பூர்ணிமா பூஜை
ADDED : ஜூலை 10, 2025 10:00 PM

- நிருபர் குழு -
உடுமலை தில்லை நகர் சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில், குரு பூர்ணிமாவையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு, காக்கட ஆரத்தியுடன் பூஜைகள் துவங்கியது.
காலை, 8:00 மணிக்கு, கணபதி ேஹாமம், தத்தாத்ரேயர் ேஹாமம், ஸ்ரீ லட்சுமி ேஹாமம், ஆஞ்சநேயர் ேஹாமம் நடைபெற்றது.
காலை, 9:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். காலை, 9:30 மணிக்கு, சீரடி ஆனந்த சாயிநாதருக்கு, 16 வகை சிறப்பு அபிேஷகங்கள், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
தொடர்ந்து, 108 வலம்புரி சங்காபிேஷகம், அபிேஷகம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஸ்ரீ சத்யநாராயண பூஜை நடந்தது.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, ஆனி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், திருநீறு, பன்னீர் மற்றும் பழங்களை கொண்ட அபிேஷக பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது.
இதே போல், வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில், அண்ணாநகர் மாரியம்மன்கோவில், ேஷக்கல்முடி சிவன் கோவில்களில் பவுர்ணமி பூஜை நடந்தது.