/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டில் கிடந்த 'குட்கா' போலீசார் விசாரணை
/
ரோட்டில் கிடந்த 'குட்கா' போலீசார் விசாரணை
ADDED : ஜன 02, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;பல்லடம் அருகே ரோட்டில் சிதறு கிடந்த குட்கா பொருட்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் உடுமலை மெயின் ரோடு, வடுகபாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லை பகுதியில், பயன்படுத்தப்படாத ஹான்ஸ் பாக்கெட்டுகள் குவியலாக கிடந்தன. தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார், குட்கா பாக்கெட்டுகளை கைபற்றி எடுத்து சென்றனர். குட்கா பொருட்கள் கடத்தி வரும்போது, போலீசில் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் ரோட்டில் வீசி செல்லப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.