sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று அரையாண்டு தேர்வு நிறைவு; நாளை முதல் 12 நாள் பள்ளி விடுமுறை

/

 இன்று அரையாண்டு தேர்வு நிறைவு; நாளை முதல் 12 நாள் பள்ளி விடுமுறை

 இன்று அரையாண்டு தேர்வு நிறைவு; நாளை முதல் 12 நாள் பள்ளி விடுமுறை

 இன்று அரையாண்டு தேர்வு நிறைவு; நாளை முதல் 12 நாள் பள்ளி விடுமுறை


ADDED : டிச 23, 2025 07:25 AM

Google News

ADDED : டிச 23, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: இன்றுடன் (23ம் தேதி) அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வுகள் முடிகிறது. நாளை (24ம் தேதி) முதல் ஜன. 4ம் தேதி வரை, 12 நாட்கள் விடுமுறை. விடுமுறை முடிந்து, ஜன. 4 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

ஜன. 5ல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், மாணவ, மாணவியருக்கு, சென்னையில் இருந்து மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. முதல் வகுப்புக்கு, 8,690, இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு முறையே, 9,688 மற்றும், 9,643. 4 - 11 ஆயிரத்து, 261, 5 - 12 ஆயிரத்து, 324, 6 - 5,202, 7 - 5,445 என மொத்தம், 62 ஆயிரத்து, 253 புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் தெற்கு வட்டார பள்ளிகளுக்கான புத்தகங்கள், குப்பாண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளியிலும், வடக்கு வட்டாரத்துக்கான புத்தகங்கள், 15 வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளியிலும் வைக்கப்பட்டு, பள்ளிகள் வாரியாக பிரிக்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் அனைத்து பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, பள்ளி திறக்கும் நாளில், மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் மூலம் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us