/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கையுந்து பந்து போட்டி குமுதா பள்ளி சிறப்பு
/
கையுந்து பந்து போட்டி குமுதா பள்ளி சிறப்பு
ADDED : டிச 08, 2024 02:57 AM

திருப்பூர்: ஈரோடு மாவட்ட அளவிலான 14, 19 வயதுக்குட்பட்ட மாணவர் மற்றும் மாணவியருக்கான கையுந்து பந்து போட்டி குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி சென்னிமலையிலும் நடந்தது.
இதில், 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவில் மாவட்ட அளவில் குமுதா பள்ளி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம்வென்றனர்; மாநில போட்டிக்குத் தகுதி பெற்றனர். 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் மாவட்ட அளவில் இப்பள்ளி இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணைச்செயலர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி ஆகியோர் பாராட்டினர்.