sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருமூர்த்திமலையில் கன மழை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை

/

திருமூர்த்திமலையில் கன மழை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை

திருமூர்த்திமலையில் கன மழை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை

திருமூர்த்திமலையில் கன மழை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை


ADDED : ஜன 20, 2025 04:38 AM

Google News

ADDED : ஜன 20, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது.

உடுமலை, திருமூர்த்திமலைப்பகுதிகளில், கன மழை பெய்து வருவதால், மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணியர், பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மலையடிவாரத்திலுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கம் போல், பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் முதல், நேற்று காலை வரை, அமராவதி அணையில், 24 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. திருமூர்த்தி அணை - 8, மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் - 6, வரதராஜபுரம் - 14, பூலாங்கிணர் - 2, நல்லாறு - 18, உப்பாறு - 4 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.






      Dinamalar
      Follow us