/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூலிகை அறிவியல் மேம்பாடு கருத்தரங்கு
/
மூலிகை அறிவியல் மேம்பாடு கருத்தரங்கு
ADDED : டிச 13, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் தாவரவியல் துறை சார்பில் 'மூலிகை அறிவியல் மூலம் இளைஞர் மற்றும் பெண்கள் மேம்பாடு' கருத்தரங்கம் நடந்தது.
பேராசிரியர் பாலசரவணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) லிட்டி கொரியா தலைமை தாங்கினார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லுாரி முன்னாள் முதல்வர் கீதா, தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் பத்மாவதி, எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லுாரி முன்னாள் தாவரவியல் துறைத்தலைவர் குருசாமி ஆகியோர் பேசினர்.

