sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்; புகழை பறைசாற்றிய கொங்கு நாடு விவசாயிகள் கட்சியினர்

/

தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்; புகழை பறைசாற்றிய கொங்கு நாடு விவசாயிகள் கட்சியினர்

தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்; புகழை பறைசாற்றிய கொங்கு நாடு விவசாயிகள் கட்சியினர்

தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்; புகழை பறைசாற்றிய கொங்கு நாடு விவசாயிகள் கட்சியினர்


ADDED : ஆக 04, 2024 05:16 AM

Google News

ADDED : ஆக 04, 2024 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில், தீரன் சின்னமலையின், 219ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் தீரன் சின்னமலை படத்துக்கு வீரவணக்கம் செலுத்தி, அவரது புகழைப் பறைசாற்றினர்.

கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில், சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட மாவீரன் தீரன் சின்னமலையின், 219ம் ஆண்டு நினைவு நாள் விழா திருப்பூர், காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கொங்கு முருகேசன் தலைமை வகித்தார். பொது செயலாளர் கொங்கு ராஜாமணி, கவுரவ தலைவர் முருகேசன், துணை தலைவர் ராமசாமி, பொருளாளர் செல்வராஜ், தலைமை நிலைய செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கபடி கழகத் தலைமை புரவலர் சக்தி சுப்ரமணியம், துணை மேயர் பாலசுப்ரமணியம், திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், ம.தி.மு.க., மாநகர மாவட்ட செயலாளர் நாகராஜ், கபடி கழக செய்தி தொடர்பாளர் சிவபாலன், மாநகராட்சி கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், தம்பி வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், பங்கேற்றவர்கள் தீரன் சின்னமலைக்கு புகழாரம் சூட்டினர். அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

----

படம் 6 காலம்

கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில்திருப்பூர், காயத்ரி திருமண மண்டபத்தில் நடந்த தீரன் சின்னமலை 219ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், மாநில தலைவர் கொங்கு முருகேசன் பேசினார். அருகில் பொதுச்செயலாளர் கொங்கு ராஜாமணி, துணைமேயர் பாலசுப்ரமணியம் மற்றும் நிர்வாகிகள்.

நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

அரசு பள்ளிக்கு நிதி உதவி

தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியின் கல்வி வளர்ச்சி பணிக்காக கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில், 2 லட்சம் ரூபாய், கபடி கழகம், ம.தி.மு.க., கவுன்சிலர் நாகராஜ் மற்றும் எஸ்.எஸ்., ஓட்டல் குழுமங்களின் சேர்மன் முருகானந்தம் ஆகியோர் சார்பில், தலா ஒரு லட்சம் ரூபாய் உட்பட, ஐந்து லட்சம் ரூபாயை அப்பள்ளி தலைமையாசிரியரிடம் நிர்வாகிகள் வழங்கினர்.திருப்பூர் மாவட்ட கபடி கல்வி அறக்கட்டளை சார்பில், நான்கு லட்சம் ரூபாய் மற்றும் துணை செயலாளர் வேலுசாமி, 25 ஆயிரம் ரூபாய் என, 4.25 லட்சம் ரூபாயை இன்று வழங்குகின்றனர்.








      Dinamalar
      Follow us