ADDED : டிச 20, 2025 08:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும்,புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதி கிராமங்களுக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் செல்ல நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் இங்கு வருகின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி உள்ளது.
இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இருளில் மக்கள் அச்சத்துடன் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது குறித்து நகராட்சிக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, புது பஸ் ஸ்டாண்டில் உயர்மின்விளக்கு அமைக்க நகராட்சி அதிகாரிகள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

