ADDED : பிப் 26, 2026 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு இல்லாததால், போதிய வெளிச்சமின்றி பயணியர் பாதிக்கின்றனர்.
உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும், புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதியிலுள்ள மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர் செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களில் செல்ல தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர். இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால், பாதுகாப்பில்லாத சூழல் காணப்படுகிறது. எனவே, இதை நகராட்சி அதிகாரிகள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

