sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முதல்வர் வருகை எதிரொலி நெடுஞ்சாலைத்துறை முன்னேற்பாடு

/

முதல்வர் வருகை எதிரொலி நெடுஞ்சாலைத்துறை முன்னேற்பாடு

முதல்வர் வருகை எதிரொலி நெடுஞ்சாலைத்துறை முன்னேற்பாடு

முதல்வர் வருகை எதிரொலி நெடுஞ்சாலைத்துறை முன்னேற்பாடு


ADDED : ஜூலை 13, 2025 12:36 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் :வரும், 23ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் மற்றும் உடுமலையில் நடக்கவுள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு, முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருப்பூரில் இருந்து தரைவழிப் பயணமாக செல்லும் முதல்வர், பல்லடம் வழியாக உடுமலை செல்வதால், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உஷாராகி உள்ளனர். முதல்வர் வருகை எதிரொலியாக, பல்லடம்- - திருப்பூர் ரோடு மற்றும் உடுமலை ரோடு ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. ரோட்டின் இருபுறமும் உள்ள முட்செடிகள், புதர்கள் உள்ளிட்டவை அகழ் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.

மையத்தடுப்பு கற்கள், மரங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்டவற்றுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. ரோட்டில் உள்ள பள்ளங்கள், குழிகள் மூடப்பட்டு, ரோடு சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு நாட்களாகவே இந்த பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. முதல்வர் வர, இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதற்கு முன்னதாகவே, தயாராகி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us