ADDED : அக் 13, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவரையில் கொடி அவரை, செடி அவரை என்ற இரண்டு வகைகள் உள்ளன.
வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த அவரை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தொடர் மழை பெய்து வருவதால் அவரைச் செடியில் உள்ள பூக்கள் உதிர்ந்து வருகிறது. இதனால் சந்தைக்கு வரும் அவரை வரத்து குறைந்துள்ளது. கிலோ, 70 ரூபாய்க்கு உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மழை தொடர்ந்தால் 100 ரூபாயை தொட வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.