/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
ADDED : பிப் 17, 2026 07:00 AM
காங்கேயம்; காங்கேயம் அரசு கலை அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், கோரிக்கையை வலியுறுத்தி பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்-ளனர்.
காங்கேயம் அருகே முள்ளிபுரத்தில் காங்கேயம் கலை அறிவியல் கல்லுாரி இயங்குகிறது. இங்கு, 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்-கின்றனர். கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்-களாக, 35 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். யு.ஜி.சி., அறிவுறுத்தியபடி, 57,800 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். 12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். உறுப்புக்கல்லுாரி கவுரவ விரிவுரை-யாளர்களுக்கு பி.எப்., பிடித்தம் செய்வதுபோல், அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பிடித்தம் செய்ய வேண்டும். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்-கையை வலியுறுத்தி, தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

