/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்காவின் வரி உயர்வை சமாளிப்பது எப்படி? ஏற்றுமதியாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
/
அமெரிக்காவின் வரி உயர்வை சமாளிப்பது எப்படி? ஏற்றுமதியாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
அமெரிக்காவின் வரி உயர்வை சமாளிப்பது எப்படி? ஏற்றுமதியாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
அமெரிக்காவின் வரி உயர்வை சமாளிப்பது எப்படி? ஏற்றுமதியாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
ADDED : ஏப் 09, 2025 07:02 AM

திருப்பூர் : அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வுக்கு பின், அடுத்தகட்ட தொழில் பாதுகாப்பு குறித்து திட்டமிட ஏதுவாக, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இன்று ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவின், ஒட்டு மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், 14 சதவீத பங்களிப்புடன், அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இறக்குமதி வரி, 16 சதவீதமாக இருந்ததை, அமெரிக்கா, கூடுதலாக, 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது, அந்நாட்டின் வர்த்தகர்கள் மற்றும் இந்திய உற்பத்தியாளருக்கு, பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த வரி உயர்வு, சில மாதங்களுக்கு பின்னரே, உலக சந்தைகளில் எதிரொலிக்கும் என, வர்த்தகர்கள் கணக்கிட்டுள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், 26 சதவீத வரி உயர்வு பரவாயில்லை என்ற மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 'பரஸ்பரம்' வரிவிதிப்பு என்று, அமெரிக்க அழுத்தமாக குறிப்பிட்டுள்ளதால், இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைத்தால், ஏற்றுமதியாகும் ஆடைகளுக்கான வரியும் குறைய வாய்ப்புள்ளது.
போட்டி நாடுகளுக்கான வரியும் உயர்ந்துள்ளது, இந்தியாவுக்கு வரும் காலங்களில் புதிய வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாக இருக்கும். இருப்பினும், தற்போதைய குழப்பத்தை தீர்க்க மத்திய அரசு உதவ வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில், 40 சதவீதம் ஆடைகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன; 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி, திடீர் வரி உயர்வால், நேரடியாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், பரஸ்பரம் வரிவிதிப்பு தொடர்பாக, இன்று, நாடுமுழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுடன் கலந்தாய்வு நடத்த உள்ளார். 'ஆன்லைன்' வாயிலாக நடக்கும் ஆலோசனையின் வாயிலாக, வரி உயர்வால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பின்னலாடை தொழில் பாதுகாப்புக்கான வழிமுறைகள் குறித்து, அமைச்சரிடம் முறையிட, ஏற்றுமதியாளரகள் தயாராக உள்ளனர்.