ADDED : அக் 17, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும் புறநகர் பஸ்களும், கிழக்கு பகுதிக்கான டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, இதை நகராட்சி அதிகாரிகள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.