ADDED : பிப் 10, 2024 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கண், காது மூக்கு தொண்டை, மனநலம், நரம்பியல், எலும்புமுறிவு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து, அடையாள அட்டைக்கு பரிந்துரைத்தனர்.
முகாமில், புதிதாக 86 மாற்றுத்திறனாளிகளுக்கும்; 23 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்பட்டது.