ADDED : ஜூலை 27, 2025 11:31 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்; கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் குவிகின்றனர். நுழைவாயில் முதல் நடைபாதையில், மனு எழுதிக்கொடுப்போர் பத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருக்கின்றனர். நுாறு ரூபாய் வரைகட்டணம் வசூலிக்கின்றனர். சிலர் புரியாத வகையில் மனுவைக் கிறுக்கித் தள்ளிவிடுவதாகவும் புகார் எழுகிறது.
குறைகேட்பு கூட்ட நாளில், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக, ஏழைகளுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்க நடவடிக்கைகள் தேவை.
