sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஆம்புலன்ஸில் குவா... குவா! தாயும் சேயும் நலம்

/

 ஆம்புலன்ஸில் குவா... குவா! தாயும் சேயும் நலம்

 ஆம்புலன்ஸில் குவா... குவா! தாயும் சேயும் நலம்

 ஆம்புலன்ஸில் குவா... குவா! தாயும் சேயும் நலம்


ADDED : நவ 19, 2025 04:37 AM

Google News

ADDED : நவ 19, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம், மனக்கடவை சேர்ந்தவர் ராகேஷ், 40. இவரது மனைவி சுசீலா, 35; நிறைமாத கர்ப்பிணி.

நேற்று அதிகாலை, சுசீலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தகவலின் பேரில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் சென்றது.

வீட்டிலிருந்து அவரை அழைத்து கொண்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். கர்ப்பிணிக்கு பணிகுடம் உடைந்து, குழந்தையின் தலை வெளியே வந்தது.

உடனே, ஆம்புலன்சில் இருந்த, அவசரகால மருத்துவ நிபுணர் இளவரசு, பைலட் கவுதம் ஆகியோர் வழியிலேயே பிரசவம் பார்த்தனர்.

அதில், பெண் குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாயும், சேயும் நலமாக உள்ளனர். துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த, ஆம்புலன்ஸ் பணியாளர்களை அனைவரும் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us