sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வனத்துக்குள் திருப்பூர்' 11வது திட்ட துவக்க விழா

/

'வனத்துக்குள் திருப்பூர்' 11வது திட்ட துவக்க விழா

'வனத்துக்குள் திருப்பூர்' 11வது திட்ட துவக்க விழா

'வனத்துக்குள் திருப்பூர்' 11வது திட்ட துவக்க விழா


ADDED : ஜூன் 17, 2025 11:34 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்ட துவக்கவிழா, வருமானவரித்துறை அதிகாரிகள் முன்னிலையில், வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.

திருப்பூரில், மரம் வளர்ப்பு திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு.

பசுமை ஆர்வலர்களுடன் கரம் கோர்த்து, விவசாய நிலம், கோவில் நிலம் தொழிற்சாலை வளாகங்களில், பயனுள்ள வகையில் மரக்கன்று நட்டு வளர்க்க உதவி செய்யப்படுகிறது.

பாதுகாப்பான வேலி மற்றும் தண்ணீர் வசதியுள்ள நில உரிமையாளர் விருப்பம் தெரிவித்தால், குழி எடுத்து, மரக்கன்றுகளை எடுத்து வந்து நட்டு கொடுக்கிறது வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழு; சொட்டுநீர் கட்டமைப்பில், தண்ணீர் விட்டு பராமரித்தால் போதும், நில உரிமையாளர் நீண்ட வருமானம் பெறலாம்.

கடந்த, 2015ம் ஆண்டு துவங்கிய இத்திட்டத்தை, 'தினமலர்' நாளிதழ், பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

அதன் பயனாக, நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் மரக்கன்று நட்டு வளர்க்கும் பசுமை ஆர்வலர்களும் உண்டு. இதுவரை, 10 திட்டங்கள் வாயிலாக, 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மரமாக வளர்த்து அளப்பரிய சாதனை புரிந்துள்ளது 'வெற்றி' அமைப்பு.

பருவமழையை அறுவடை செய்யும் வகையில், மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது வழக்கம். அதன்படி, 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்ட துவக்க விழா, வரும் 21ம் தேதி அவிநாசி தெக்கலுார் அடுத்துள்ள எஸ்.சி.எம்., நிறுவன வளாத்தில் நடக்கிறது.

இதுகுறித்து 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் கூறியதாவது:

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்துக்கான முன்பதிவு துவங்கிவிட்டன.

இரண்டு லட்சம் மரக்கன்றுகளும் தயாராக இருக்கிறது. முன்கூட்டியே, குழி எடுத்து, நிலம் தயார்படுத்தும் பணியும் பரபரப்பாக நடந்து வருகிறது. பருவமழையும் நம்மை வரவேற்பது போல், கருணை காட்டி வருகிறது. அதன்படி, 21ம் தேதி காலை, அவிநாசி அருகே, 11வது திட்ட துவக்க விழா நடக்க உள்ளது.

கோவை வருமான வரித்துறை தலைமை கமிஷனர் அருண்பரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். முதன்மை கமிஷனர் திவாகர் பிரசாத், திருப்பூர் இணை கமிஷனர் இளங்கிள்ளி உட்பட, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட குழுவினர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us