sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநாடு அரங்கம் திறப்பு

/

மாநாடு அரங்கம் திறப்பு

மாநாடு அரங்கம் திறப்பு

மாநாடு அரங்கம் திறப்பு


ADDED : பிப் 12, 2024 01:04 AM

Google News

ADDED : பிப் 12, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் டவுன்ஹால் வளாகத்தில் பல்நோக்கு மாநாட்டு அரங்கம் நேற்று திறப்பு விழா கண்டது. தொழில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதன் மூலம் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

குமரன் ரோட்டில் உள்ள டவுன்ஹால் வளாகத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 54 கோடி ரூபாய் மதிப்பில் அமைந்துள்ள மாநாட்டு அரங்கம் நேற்று திறக்கப்பட்டது.

இந்த வளாகம் 1.64 ஏக்கர் பரப்பில் உள்ள இடத்தில், 34 ஆயிரம் சதுர அடி பரப்பில் கீழ் தளத்துடன் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 135 இரு சக்கர வாகனங்களும், 72 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் வசதி உள்ளது. இவ்வளாகத்தில் 45 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட தரைமட்ட தண்ணீர் தொட்டியும், ஒரு லட்சம் லி., கொள்ளளவு கொண்ட தீயணைப்புக்கான தண்ணீர் தொட்டியும் உள்ளது.

தரைதளம் 29,500 சதுர அடி பரப்பில் உள்ளது. இதில் 8,633 சதுர அடி பரப்பில் கண்காட்சி அரங்கம்; 2,742 சதுர அடி பரப்பில் உணவுக்கூடம்; 4 ஆயிரம் சதுர அடி பரப்பில் வி.ஐ.பி.,க்களுக்கான ஓய்விடம் உள்ளிட்ட வசதிகளுடன் உள்ளது.

முதல் தளம், 650 பேர் அமரும் விதமாக 8,633 சதுர அடி பரப்பில் ஒரு அரங்கம்; இருநுாறு பேர் அமரும் விதமாக தலா 2,943 சதுர அடி பரப்பில் 2 கூட்ட அரங்குகள்; 100 பேர் அமரும் விதமாக 2,742 சதுர அடி பரப்பில் ஒரு அரங்கமும் உள்ளது. இத்தளத்தில் 250 பேர் அமரும் விதமாக உணவுக்கூடம் அமைக்கப் பட்டுள்ளது.

அதே போல் இரண்டாவது தளத்தில், 8,633 சதுர அடி பரப்பில் 500 பேர் அமரும் வகையில், ஒரு அரங்கம்; 200 பேர் அமரும் விதத்தில் இரு அரங்குகள் மற்றும் இரு உணவுக் கூடங்களும் உள்ளது.

இது போன்ற வசதி களுடன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த வளாகம் திருப்பூர் போன்ற தொழில் நகரில் தொழில் மற்றும் வணிகரீதியான பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது. தொழில் துறையினர் மற்றும் அமைப்புகள் தங்கள் நிகழ்ச்சிகளை இங்கு நடத்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது.






      Dinamalar
      Follow us