/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீஆண்டவர் மஹால் திருமண மண்டபம் திறப்பு
/
ஸ்ரீஆண்டவர் மஹால் திருமண மண்டபம் திறப்பு
ADDED : பிப் 23, 2024 12:09 AM

திருப்பூர்;திருப்பூர், பி.என்., ரோடு கூத்தம்பாளையம் பிரிவு, எம்.பி.எம்., சைக்கிள் மார்ட் கிழக்கு, பாலாஜி நகரில், ஸ்ரீ ஆண்டவர் மஹால் திருமண மண்டப திறப்பு விழா நேற்று அதிகாலை நடந்தது. சிறப்பு வேள்வி பூஜை நடத்தி இதன் கிரகப் பிரவேசம் மற்றும் திறப்பு விழா நடந்தது. மண்டப உரிமையாளர் குமாரசாமி, கோவிந்தம்மாள் முன்னிலை வகித்தனர். இவர்களது குடும்பத்தினர் மூர்த்தி, சாந்தி, அஸ்மிதா மற்றும் ஆதித் ஆகியோர் வரவேற்றனர்.வேள்வி பூஜையைத் தொடர்ந்து நேற்று காலை மண்டப வளாகத்தில் வள்ளி, தேவசேனா சமேத முருகப் பெருமான் திருக்கல்யாண வைபவம் நடந்தது. உத்தமலிங்கேஸ்வர சிவம் மற்றும் குழுவினர் இதை நடத்தினர்.திரளான முக்கிய பிரமுகர்கள், விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மண்டப நிர்வாகிகள் கூறுகையில், ''இப்புதிய மண்டபம் 400 பேர் இருக்கை கொண்ட முகூர்த்த ஹால்; 200 இருக்கை கொண்ட டைனிங் ஹால் கொண்டுள்ளது. விசாலமான பபே ஹால் மற்றும் நவீன சமையல் கூடம் உள்ளது. வாகனங்கள் நிறுத்தும் வகையில் விசாலமான பார்க்கிங் பகுதி உள்ளது.
திருமண மண்டபம் புக்கிங் மற்றும் விவரங்களுக்கு 94430 18529, 95004 06008 எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்றனர்.