sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுரங்க பால ஓடுதளம் பழுது விபத்துகள் அதிகரிப்பு

/

சுரங்க பால ஓடுதளம் பழுது விபத்துகள் அதிகரிப்பு

சுரங்க பால ஓடுதளம் பழுது விபத்துகள் அதிகரிப்பு

சுரங்க பால ஓடுதளம் பழுது விபத்துகள் அதிகரிப்பு


ADDED : ஏப் 08, 2025 10:32 PM

Google News

ADDED : ஏப் 08, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ;உடுமலை தளி ரோடு ரயில்வே சுரங்க பால ஓடுதளம் பழுதடைந்துள்ளதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

உடுமலையிலிருந்து, அமராவதி, திருமூர்த்தி மற்றும் மூணாறு செல்லும் பிரதான வழித்தடமாக தளி ரோடு அமைந்துள்ளது.

தளி ரோட்டில், ரயில்வே வழித்தடத்தை கடக்க அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாலத்தில், மழை காலத்தில் அதிகளவு நீர் தேங்குவதால், போக்குவரத்து பாதித்து வருகிறது. தொடர்ந்து, நீர் தேங்குவதால், பாலத்தின் ஓடுதளம் குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

இதில், மழை நீரும் தேங்கியுள்ளதால், குழி தெரியாமல், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதை சரிசெய்ய வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக வலியறுத்தி வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

எனவே, ரயில்வே சுரங்கப்பாலத்தில் ஓடு தளத்தை சீரமைக்கவும், ஓடு தளத்தில் நீர் தேங்காமல் இருக்க, அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு கிணற்றை பராமரித்து, மழை காலங்களில் கிணற்றிலிருந்து நீரை வெளியேற்றவும், நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us