/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மீன் வரத்து அதிகரிப்பு விற்பனை குறைவு
/
மீன் வரத்து அதிகரிப்பு விற்பனை குறைவு
ADDED : மார் 24, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : கடலோர மாவட்டங்களில் மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளது. இதனால், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து, 15 நாட்களாக இயல்பை விட அதிகமாக உள்ளது. நேற்று 55 டன் கடல் மீன், 10 டன் அணை மீன்கள் விற்பனைக்கு வந்தது.
மீன் வரத்து அதிகரிப்பால், அனைத்து கடைகள் முன்பு மீன்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மூன்றாவது வாரமாக, வரத்து உயர்வால், விலை குறைந்திருந்த போதும், நேற்று மீன்களை வாங்க அதிகளவில் கூட்டம் மார்க்கெட்டில் இல்லை. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் நடப்பு வாரம் மீன் விற்பனை குறைவு என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.