sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கலையாத கழுகுப்பார்வை! ரூ.4.51 கோடி அமலாக்கப்பிரிவு அபராதம்

/

கலையாத கழுகுப்பார்வை! ரூ.4.51 கோடி அமலாக்கப்பிரிவு அபராதம்

கலையாத கழுகுப்பார்வை! ரூ.4.51 கோடி அமலாக்கப்பிரிவு அபராதம்

கலையாத கழுகுப்பார்வை! ரூ.4.51 கோடி அமலாக்கப்பிரிவு அபராதம்


ADDED : பிப் 10, 2024 12:21 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் வணிக வரி கோட்டத்தில், 'இ-வே' பில் இல்லாமல் சரக்கு கொண்டுசென்ற வாகனங்களை பிடித்து, அமலாக்க பிரிவினர் 4.51 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.

ஈரோடு வணிக வரி கோட்டத்தில் திருப்பூர் வணிக வரி மாவட்டம் இயங்கிவந்தது. அமலாக்க பிரிவினர், ஈரோட்டிலிருந்து திருப்பூர் வந்து, வாகன சோதனைகள் நடத்தவேண்டியிருந்தது. எப்போதாவதுதான் வணிக வரித்துறையின் பறக்கும்படை வாகனம், திருப்பூருக்கு 'விசிட்' அடிக்கும்.

மூன்று வணிக வரி மாவட்டங்களை உள்ளடக்கி, புதிய திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டு, கடந்த 2023, ஜூலை மாதம் முதல் செயல்பட்டுவருகிறது. அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில், வணிக வரி கோட்டத்துக்கான அமலாக்க பிரிவுடன் கூடிய இணை கமிஷனர் அலுவலகம் இயங்குகிறது.

இதையடுத்து, பறக்கும்படையினர், திருப்பூரின் பிரதான சாலைகளில், தினமும் இரவு - பகலாக ரோந்து சென்று, வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.

வாகனங்களில் கொண்டுசெல்லப்படும் பின்னலாடைகள் உட்பட அனைத்துவகை சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களையும் மடக்கிப்பிடித்து, இ-வே பில், இ- இன்வாய்ஸ் உள்ளதா; சரக்குகளின் தொகை விவரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா; வரி ஏய்ப்புக்கான முகாந்திரம் உள்ளதா என, ஆய்வு செய்கின்றனர்.

அதிரடி வசூல்


வணிக வரித்துறை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

திருப்பூர் வணிக வரி கோட்ட பகுதிகளில், பகலில் 2; இரவு நேரம் ஒன்று என்ற அடிப்படையில் பறக்கும்படை வாகனங்கள், ரோந்து செல்கின்றன. ஒவ்வொரு வாகனத்திலும் தலா இரண்டு வணிக வரி அதிகாரிகள் இருக்கின்றனர்; அவர்களிடம், இ-வே பில் தணிக்கை செய்வதற்கான செயலி உள்ளது. விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.

திருப்பூர் வணிக வரி மாவட்டம் செயல்பாட்டுக்கு வந்த, கடந்த 2023, ஜூலை 7 முதல் நடப்பாண்டு ஜனவரி 31ம் தேதி வரை, இ-வே பில் இல்லாமல் இன்றி சரக்கு கொண்டுசென்ற, 868 வாகனங்கள் அமலாக்க பிரிவின் பிடியில் சிக்கியுள்ளன; மொத்தம் 4.51 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us