sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கால்நடை வளர்ப்போர் தொழில்நுட்ப குழு துவக்கம்

/

கால்நடை வளர்ப்போர் தொழில்நுட்ப குழு துவக்கம்

கால்நடை வளர்ப்போர் தொழில்நுட்ப குழு துவக்கம்

கால்நடை வளர்ப்போர் தொழில்நுட்ப குழு துவக்கம்


ADDED : செப் 27, 2024 11:20 PM

Google News

ADDED : செப் 27, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: ராமச்சந்திராபுரம் கிராமத்தில், கால்நடை வளர்ப்போர் தொழில்நுட்ப குழுவின் துவக்க விழா நேற்று நடந்தது.

உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், கால்நடை தொழில்நுட்ப தகவல் மையம் பெதப்பம்பட்டியில் செயல்பட்டு வருகிறது.

இந்த மையம் சார்பில், ராமச்சந்திராபுரம் கிராமத்தில், கால்நடை வளர்ப்போரை உள்ளடக்கிய, தொழில்நுட்ப குழு உருவாக்கப்பட்டு, நேற்று துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் குமாரவேல் தலைமை வகித்தார்.

வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, கனரா வங்கி மேலாளர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். பாலில் இருந்து கொழுப்பு பிரித்தெடுக்கும் இயந்திரம் கிராம கால்நடை தொழில்நுட்ப குழுவுக்கு வழங்கப்பட்டது.

மேலும், நறுமண பால் தயாரிப்பு, கால்நடைகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவம் மற்றும் சைலேஜ் தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. குழுவை சேர்ந்த, 52 கால்நடை வளர்ப்போர் பங்கேற்று பயன்பெற்றனர்.

மேலும், கால்நடை மருத்துவ கல்லுாரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us