/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ச்சி பணி துவக்கம்; நலத்திட்ட உதவி வழங்கல்
/
வளர்ச்சி பணி துவக்கம்; நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 10, 2024 12:31 AM
திருப்பூர்;வெள்ளகோவில் சுபஸ்ரீ மகாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், வெள்ளகோவில் ஒன்றியத்தில் நபார்டு திட்டத்தில் ரோடுகள் மேம்படுத்தும் பணி ஏறத்தாழ 17 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் மக்கள் சேவை முகாம் வாயிலாக பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் 969 பேருக்கு 10.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன் வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார்.
நிகழ்ச்சியில் 21 பேருக்கு 10.50 லட்சம் ரூபாய் மதிப்பில் தொகுப்பு வீடுகள் பராமரிப்பு கடன் வழங்கப்பட்டது.

