/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எரிவாயு தகன மேடை பயன்பாடு துவக்கம்
/
எரிவாயு தகன மேடை பயன்பாடு துவக்கம்
ADDED : மார் 16, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி சார்பில், கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன ேமடை பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி 41வது வார்டு, முருகம்பாளையத்தில், எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. மூலதன திட்ட நிதியில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடை பயன்பாட்டுக்கு விடும் வகையில், துவக்க விழா நடந்தது. மேயர் தினேஷ்குமார் இதன் இயக்கத்தை துவக்கி வைத்தார். கமிஷனர் பவன்குமார், மண்டல தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தனர்.

