/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.13.40 கோடி மதிப்பில் புதிய திட்ட பணி துவக்கம்
/
ரூ.13.40 கோடி மதிப்பில் புதிய திட்ட பணி துவக்கம்
ADDED : ஜன 06, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய நகர்புற ஆரம்ப சுகாதார திட்டத்தில், 12 புதிய துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி.
நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.5.35 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்; 23 பள்ளிகளில், ரூ.8.05 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை என, மொத்தம் 13.40 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் நேற்று துவக்கிவைத்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.