ADDED : மார் 04, 2024 10:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செந்தில் பிரபு, வீரப்பன்சத்திரம் ஸ்டேஷனுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து வேலுார் மாவட்டம் வெள்ளளூர் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ரவி, 40, சென்னிமலைக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
இளம் பெண் மாயம்
கோபி: கோபி அருகே குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் ஷாலினி, 24; உடையாம்பாளையம் பால் கம்பெனி கணக்காளர். கடந்த பிப்.,29ல் வேலைக்கு சென்றவர் அன்று மாலை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் தாய் வனிதா புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

