sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பூச்சி தாக்குதல் எதிரொலி குட்டை தென்னைக்கு பாதிப்பு

/

பூச்சி தாக்குதல் எதிரொலி குட்டை தென்னைக்கு பாதிப்பு

பூச்சி தாக்குதல் எதிரொலி குட்டை தென்னைக்கு பாதிப்பு

பூச்சி தாக்குதல் எதிரொலி குட்டை தென்னைக்கு பாதிப்பு


ADDED : மார் 29, 2025 11:49 PM

Google News

ADDED : மார் 29, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: சில ஆண்டுகளுக்கு முன்பு இளநீர் என்றால் செவ்விளநீர் என்ற நிலை இருந்தது. அந்த அளவுக்கு அவை சந்தையை ஆக்கிரமித்து இருந்தன. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அவற்றைக் காண்பதே அரிதாக உள்ளது.

தென்னையை பல்வேறு நோய்கள் தாக்கி வருகிறது. அவற்றில் மிகவும் முக்கியமானது வெள்ளை ஈக்கள் ஆகும். வெள்ளை ஈக்கள் மரத்தின் இலைகளில் பச்சையத்தை உறிஞ்சி விடுகின்றன.

அவற்றின் கழிவுகளை ஓலையின் வெளிப்புறத்தில் பரப்பி விடுவதால் ஓலைகள் கருப்பு நிறத்திற்கு மாறி விடுகின்றன. இதனால், ஒளிச்சேர்க்கை தடைபட்டு தென்னை மரங்கள் காய்ப்பு திறனை இழந்து வருகின்றன.

இவற்றில் நாட்டு ரகங்கள் ஓரளவு தாக்குப்பிடித்து நிற்கின்றன. ஆனால், இளநீருக்காகவே சாகுபடி செய்யப்பட்ட அதிக இனிப்பு சுவையுடன் கூடிய குட்டை ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து குற்றுயிரும், குலையுயிருமாக காட்சியளிக்கின்றன.

செவ்விளநீர் அதிக விலைக்கு விற்பனையானதாலும் அதிக அளவில் இளநீர் கிடைத்ததாலும் அவற்றை பொதுமக்களும் விரும்பி வாங்கினர். தற்பொழுது அவற்றில் பூச்சி தாக்குதல் காரணமாக செவ்விள நீர் ரகங்கள் கிட்டத்தட்ட அழிந்து விட்டன. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து குட்டை ரகங்களை நட்ட விவசாயிகள் இப்போது விழி பிதுங்கி நிற்கின்றனர்.






      Dinamalar
      Follow us