ADDED : பிப் 12, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
உடுமலை: மடத்துக்குளம் நால் ரோட்டில், போக்குவரத்து நெரிசலை தடுக்க ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடத்துக்குளம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பழநி, திண்டுக்கல் மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்கின்றன.
இது மட்டுமல்லாமல் கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் செல்கின்றன. மேலும் நெடுஞ்சாலையில்
கணியூர் ரோடு, குமரலிங்கம் ரோடும் சந்திக்கின்றன. இதனால் இந்த நால்ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, மடத்துக்குளம் நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதன் வாயிலாக, இப்பிரச்னை தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
