sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை

/

ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை

ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை

ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை


ADDED : மே 01, 2025 05:41 AM

Google News

ADDED : மே 01, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளதால், நேற்று பாலாலய பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது.

திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், சபரிமலை தாந்திரீக முறைப்படி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், அய்யப்ப பக்த ஜனசங்கம் ஆகியன சார்பில், கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

சபரிமலையில் இருப்பது போல், அய்யப்ப சுவாமி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அருகில், கணபதி, முருகர், பத்ரகாளியம்மன், மாளிகைப்புரத்தம்மன், கைலாசநாதர், நவக்கிரஹம், ஸ்ரீகிருஷ்ணர் சன்னதிகள் அமைக்கப்பட்டு, வழிபாடு நடந்து வருகிறது.

இந்நிலையில், கோவில் திருப்பணி செய்து, ஜூலை 2ல் கும்பாபிேஷக விழா நடத்த கோவில் நிர்வாகக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, நேற்று, பாலாலய நிகழ்ச்சி நடந்தது. சபரிமலை பிரதம தந்திரி மோகனரு தலைமையிலான தந்திரிகள், பாலாலய பிரதிஷ்டை பூஜைகளை மேற்கொண்டனர்.

அய்யப்ப சுவாமி மூலவர், கொடிமரம் அருகே அமைக்கப்பட்டுள்ள பாலாலயத்தில் பிரதிஷ்டை செய்து, நித்ய பூஜைகள் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us