ADDED : ஜூலை 22, 2025 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் அரசு கல்லுாரியில், பன்னாட்டு பயிற்சி பட்டறை நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். பேராசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.
மாணவர்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி என்ற தலைப்பில் ஓமன் யுனிவர்சிட்டி பேராசிரியர் அரவிந்தன் பாலகிருஷ்ணன், பேராசிரியர் ராஜேஸ்வரி, ரெனால்ட் ஹட்ரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
பேராசிரியர் திப்புசுல்தான் நன்றி கூறினார்.