sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தமிழில் பெயர்ப்பலகை வைக்க அறிவுறுத்தல்

/

தமிழில் பெயர்ப்பலகை வைக்க அறிவுறுத்தல்

தமிழில் பெயர்ப்பலகை வைக்க அறிவுறுத்தல்

தமிழில் பெயர்ப்பலகை வைக்க அறிவுறுத்தல்


ADDED : ஏப் 29, 2025 09:26 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும், என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில், உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது குறித்து, வணிக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

நகராட்சித்தலைவர் மத்தீன் தலைமை வகித்தார். கமிஷனர் சரவணகுமார், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் ராஜவேல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். தமிழில் பெயர்ப்பலகை இல்லாத, வணிக நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது கடைகளுக்கு தமிழில் முன்னுரிமை கொடுத்து பெயர் வைக்கவும், அதற்கு அடுத்தபடியாக சிறிய வடிவில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பெயர் வைத்துக்கொள்ளலாம், என அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us