sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மக்கும், மக்காத குப்பை தரம் பிரிப்பு; மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

/

 மக்கும், மக்காத குப்பை தரம் பிரிப்பு; மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

 மக்கும், மக்காத குப்பை தரம் பிரிப்பு; மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

 மக்கும், மக்காத குப்பை தரம் பிரிப்பு; மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்


ADDED : டிச 16, 2025 07:00 AM

Google News

ADDED : டிச 16, 2025 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பை பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ள நிலையில், மக்கள், மக்காத குப்பையை தரம் பிரித்து பெறும் செயல்பாடுகள் துவங்கியுள்ளது. மாநிலத்தின் இரண்டாவது பெரிய காய்கறி மார்க்கெட்டாக, தென்னம்பாளையம் மார்க்கெட் உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும் தினசரி வந்து செல்கின்றனர். தினசரி, 200 டன் காய்கறி வரும் நிலையில், அழுகிய, சேதமாகி வீணாகிய எட்டு முதல் பத்து டன் காய்கறி கழிவுகள் குப்பையில் சேர்க்கப்படுகிறது.

அருகிலேயே மீன் மார்க்கெட், உழவர் சந்தை உள்ள நிலையில், ஒட்டுமொத்த கழிவுகளையும் ஒரிடத்தில் இருந்து எடுத்து செல்வதும், சுத்தமாக அகற்றுவதும் மாநகராட்சி பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பிரச்னைக்குரிய இடங்களில் இருந்து மட்டும் குப்பை அகற்றப்படுகிறது. தேங்கும் குப்பையை எடுக்க வழியில்லாமல் தொடர்ந்து சேர்ந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி, தினசரி மார்க்கெட் குத்தகைதாரர் தரப்பில், மார்க்கெட் வளாகத்தில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதில்,' என் குப்பை எனது பொறுப்பு; திருப்பூர் மாநகராட்சியில் குப்பைகளை சேகரித்து கொட்டும் இடங்களில் பிரச்னை நிகழ்வதால் இனி நமது தினசரி மார்க்கெட்டை துாய்மையாக வைத்துக் கொள்ள இன்று முதல் குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை அதற்கென்று தனியாக வைத்துள்ள டிரம்பில் போட வேண்டும். மக்கும் காய்கறி கழிவுகளை அதற்கென்று தரம் பிரித்து போட வேண்டும். இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு மட்டும் போதாது மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வாடிக்கையாளர், வடமாநிலத்தவர் வந்து செல்லும் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் அறிவிப்பு மட்டும் வைத்தால் போதாது; அதனை முழுமையாக கடைபிடிக்க ஒவ்வொரு காய்கறி மண்டி, மொத்த காய்கறி விற்பனை கடைகள் மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து தருவதற்கான வசதியை மாநகராட்சி ஏற்படுத்தி தர வேண்டும். வியாபாரிகள், விவசாயிகள் ஒவ்வொருவரும் பொறுப்பு உணர்ந்து, மாநகர துாய்மையை கருத்தில் கொண்டு மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க முன்வர வேண்டும். மார்க்கெட்டில் குப்பை தரம் பிரித்து பெறுவதை மாநகராட்சி அவ்வப்போது கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.








      Dinamalar
      Follow us