/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புற்றுநோய் கண்டறிய ஒருங்கிணைந்த பரிசோதனை
/
புற்றுநோய் கண்டறிய ஒருங்கிணைந்த பரிசோதனை
ADDED : மே 12, 2025 03:46 AM
திருப்பூர்; திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 'நமக்கு நாமே' திட்டம் மூலம், பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், நவீனக் கருவிகள் இடம்பெறுகின்றன.
பல புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், முழுமையாக குணப்படுத்த முடியும். குறிப்பாக, கிராமப்புறங்களில் பெண்கள் தயக்கம் காரணமாகபரிசோதனைக்கு செல்வதில்லை.
அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, சுகாதாரத்துறை அலுவலகங்கள் இணைந்து திருப்பூரில் ஒருங்கிணைந்த பரிசோதனைத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்திவிட இயலும். குறிப்பாக, வாய் புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பாதிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்திலேயே இந்நோய்களை கண்டறிய, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
திருப்பூர், கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், தேனி, மதுரை, திருச்சி, கரூர் ஆகிய, 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்,
கர்ப்பப்பை வாய், வாய், மார்பக புற்றுநோய்க்கு பரிசோதனை எளிமையாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற நல மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற மையங்களில் ஒருங்கிணைந்த பரிசோதனை செய்துகொள்ள முடியும்.
தொடர் கண்காணிப்பு
18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனையும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்படுகிறது. முதல்கட்ட பரிசோதனையில்அறிகுறி தெரிந்தால், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்.
சுகாதார தன்னார்வலர்கள் பரிசோதனைக்கு வர வழிப்புணர்வு ஏற்படுத்தி நோட்டீஸ் வழங்க உள்ளனர். அடுத்த, ஆறு முதல் ஒரு ஆண்டு வரை இப்பரிசோதனை திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.
- சுகாதாரத்துறையினர்.