/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளம் தலைமுறையினருக்கு ஆர்வம்; 'சுபான்ஷூ சுக்லா' தந்த ஊக்குவிப்பு
/
இளம் தலைமுறையினருக்கு ஆர்வம்; 'சுபான்ஷூ சுக்லா' தந்த ஊக்குவிப்பு
இளம் தலைமுறையினருக்கு ஆர்வம்; 'சுபான்ஷூ சுக்லா' தந்த ஊக்குவிப்பு
இளம் தலைமுறையினருக்கு ஆர்வம்; 'சுபான்ஷூ சுக்லா' தந்த ஊக்குவிப்பு
UPDATED : ஜூன் 28, 2025 06:16 AM
ADDED : ஜூன் 28, 2025 12:15 AM

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ஆக்சியம் -- 4' திட்டத்தின் கீழ் டிராகன் விண்கலத்தில் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்கள் 28 மணி நேரம் பயணித்து சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். அங்கு, ''இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) ஏழு அறிவியல் சோதனைகளுடன், 60 பரிசோதனைகளை மேற்கொண்டு, 2 வாரம் கழித்து, இக்குழுவினர் 'டிராகன்' விண்கலத்தில் பூமிக்கு திரும்புவர்'' என, 'நாசா' அறிவித்துள்ளது.
ராகேஷ் சர்மாவுக்கு பின், 41 ஆண்டுகளுக்கு பின், இந்தியர் ஒருவர் விண்வெளியில் பறந்துள்ளது பெருமைக்குரிய விஷயம். இதை நம் நாட்டு அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கொண்டாடுகின்றனர். இது மாணவ, மாணவியர் மற்றும் இளம் தலைமுறையினரிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது.