/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் ஆர்வம்; 55 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
/
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் ஆர்வம்; 55 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் ஆர்வம்; 55 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் ஆர்வம்; 55 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
ADDED : ஆக 13, 2025 08:27 PM

உடுமலை; வனத்துக்குள் திருப்பூர் - 11 திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில், 55 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யபட்டுள்ளது.
வனத்துக்குள் திருப்பூர் -11 திட்டத்தின் கீழ், நடப்பாண்டு, 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து, பராமரிக்க இலக்கு நிர்ணயித்து பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இதில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், பசுமை வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரச்சாகுபடி திட்டமாக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை பகுதிகளில், நடப்பாண்டு திட்டத்தில் இதுவரை,55 ஆயிரம் மரக்கன்றுகள் வரை நடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், உடுமலை, தென்பூதிநத்தம் விவசாயி முத்துப்பாண்டிக்கு சொந்தமான நிலத்தில், 2,500 பாக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல், மடத்துக்குளம் வெங்கடேசுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பாக்கு, 850, தேக்கு, 60, மகா கனி, 60, சந்தனம், 20, நாவல், 10 என, ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை அந்தியூரை சேர்ந்த, சாந்தி - பேபி ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில், மகாகனி, 250 மற்றும் கூந்தல் பனை, 100 என, 350 மரக்கன்றுகள் நடவு செய்து தரப்பட்டுள்ளது.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், குறைந்த நீர்த்தேவை, பராமரிப்பு மற்றும் வருவாய் அடிப்படையில் மரச்சாகுபடி திட்டமாக விவசாய நிலங்களிலும், பசுமை சூழல் பாதுகாக்கும் வகையில், கோழிப்பண்ணை வளாகங்கள், தொழிற்சாலை வளாகங்கள், பள்ளி, கல்லுாரி, கோவில் நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.
மரக்கன்றுகள் நடவு செய்து, முறையாக பராமரித்து, பசுமை வளர்க்கும் பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.

